சென்னை: முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
இந்த முகாம்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை எட்டு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
முதலாவது முகாமில் 28.91 லட்சம் பேரும், இரண்டாவது முகாமில் 16.43 லட்சம் பேரும், மூன்றாவது முகாமில் 25.04 லட்சம் பேரும், நான்காவது முகாமில் 17.04 லட்சம் பேரும், ஐந்தாவது முகாமில் 22.85 லட்சம் பேரும், ஆறாவது முகாமில் 23.27 லட்சம் பேரும், ஏழாவது முகாமில் 17.20 லட்சம் பேரும், எட்டாவது முகாமில் 16.40 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.