சென்னை:சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 75,090 கி.கி சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு கொடுங்கையூர் மற்றும் மணலியில் அமைந்துள்ள எரியூட்டு நிலையங்களுக்கு (Incinerator Plants) எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை (Sanitary Napkins & Diapers) உபயோகப்படுத்தும் ஒவ்வொரு வீட்டிலும் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை (Households) தனியாகப் பிரித்து பாதுகாப்பாக தனியே மட்கும் உறையில் (Separate Bio-Degradable Covers) போட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு ஏற்கனவே மக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.
இவ்வாறு சேகரிக்கப்படும் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை பெருநகர மாநகராட்சியால் பராமரிக்கப்படும் மண்டலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்படும் மண்டலங்களில் அதற்கென ஒதுக்கப்பட்ட வாகனங்கள் மூலமாக கொடுங்கையூர் மற்றும் மணலியில் இதற்காக அமைந்துள்ள எரியூட்டு நிலையங்களுக்கு (Incinerator Plants) எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் செய்யப்படுகிறது.