சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளதால், பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இதனால் உடனடியாக கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு, ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஏற்று ஒன்றிய அரசும், தமிழ்நாட்டிற்கு அதிகளவு தடுப்பூசிகளை அனுப்பி வருகின்றது. இந்நிலையில் இன்று (ஜூலை 28) புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 49 பார்சல்களில், 5 லட்சத்து 88 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.