கரோனா வைரஸால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைகின்றனர். இருப்பினும் குணமடைந்தவர்களின் விழுக்காடும் அதற்கு சரி சமமாக உள்ளது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது .
மே எட்டாம் தேதி முதல் இன்று வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 19 ஆயிரத்து 571 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் 11 லட்சத்து 95 ஆயிரத்து, 517 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பரிசோதிக்கப்பட்டவர்களில் 13 ஆயிரத்து 122 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.