சென்னை:மாவட்டதில்சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின் அடிப்படையில், அந்தந்த பகுதி காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சட்ட விரோத மதுபானங்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, நேற்று இரவு முதல் இன்று காலை வரை மதுபான கூடங்கள் மற்றும் இதர இடங்களில் காவல் துறையினர் மூலம் சென்னை முழுவதும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு சோதனையில் மதுபானக் கூடங்கள் மற்றும் இதர இடங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தது தொடர்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 41 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.