குரோம்பேட்டை அம்பேத்கர் நகர் வா.வூ.சி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு நான்கு வயதில் சர்வேஷ் என்ற மகன் உள்ளான்.
4 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு - chennai etv news
சென்னை: குரோம்பேட்டை அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

சர்வேஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த பாலாறு தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதனைக் கண்ட அக்கம்பக்கதினர் சிறுவனின் பெற்றோருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த குரோம்பேட்டை காவல் துறையினர், சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்புக்கு மதிப்பெண் இல்லை: தேர்ச்சி சான்றிதழ் வழங்க திட்டம்!