தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரைஸ் மில்லில் 28 லட்சம் ரூபாய் கையாடல் செய்த ஊழியர்கள் கைது! - மதுரவாயலில் மொத்த அரிசி விற்பனை நிறுவனத்தில் 28 லட்சம் ரூபாய் கையாடல் செய்த ஊழியர்கள் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்

சென்னை: மதுரவாயலிலுள்ள மொத்த அரிசி விற்பனை நிறுவனம் ஒன்றில் 28 லட்சம் ரூபாய் கையாடல் செய்த ஊழியர்கள் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

4 workers arrested for stolen Rs 28 lakh at Rice Mill
4 workers arrested for stolen Rs 28 lakh at Rice Mill

By

Published : Dec 25, 2019, 11:29 AM IST

சென்னை மதுரவாயல் வேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் மதுரையில் ஆர்.எம்.கே. மார்டன் ரைஸ் மில் என்கிற நிறுவனத்தை நடத்திவருகிறார். அதன் கிளை நிறுவனம் மதுரவாயலில் இயங்கிவருகிறது. இதில் சுரேஷ், பாபு, அய்யப்பன், லட்சுமணன் ஆகிய நான்கு பேரும் விற்பனை பிரதிநிதிகளாக வேலை புரிந்துவருகின்றனர். இவர்கள் ஓட்டல், கடைகளுக்கு மொத்தமாக அரசி ஆர்டர் செய்து அதற்கான தொகையை வசூல் செய்து நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் கட்டி வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற 28 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் தொகையை நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் கட்டாமல் இருந்துள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் உரிமையாளர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஊழியர்கள்

புகார் குறித்து நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர்கள் பணத்தைக் கட்டாமல் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்தி பின் சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: நகை அடகு கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details