சென்னை:கரோனா ஊரடங்கின்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் ஆன்லைன் மூலமாக விசாரிக்கப்பட்டன. அப்போது வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் என்பவர் ஆன்லைன் மூலம் ஆஜரான போது தனக்கு முன்பு இருந்த கேமரா 'ஆனில்' இருப்பதை தெரியாமல் உடனிருந்த பெண்ணுடன் ஆபாசமாக நடந்துகொண்டார்.
இதை ஆன்லைனில் ஆஜராகியிருந்த மற்றொருவர் தன் செல்ஃபோனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். சமூக வலைத்தளத்தில் வைரலான இந்த வீடியோவை கண்டு நீதிபதிகள் வழக்கறிஞர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து எடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து, சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.