தமிழ்நாடு

tamil nadu

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா; ஒரே நாளில் 38 பேர் பாதிப்பு.. ஒருவர் பலி..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 10:54 PM IST

Today TN Corona Update: தமிழகத்தில் இன்று (ஜன.05) 38 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் பொதுச் சுகாதாரத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Today TN Corona Update
தமிழகத்தில் ஒரே நாளில் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த ஜெஎன் 1 கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது உருமாற்றம் அடைந்த கரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு, தற்பொழுது இரட்டை இலக்கத்திற்கு மாறி வருகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பின் போது தொண்டை வலி, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.அவ்வாறு இருந்தால், அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று வரக்கூடாது என்பதற்காக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், முககவசம் அணிந்து செல்வதும் நல்லது என பொதுச் சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

மேலும், கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் இணை நோய் இருந்தால், கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என பொதுச் சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (ஜன.3) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழகத்தில் கரோனா புதியதாக 680 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம், 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 188 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுமட்டும் அல்லாது, தமிழகத்தில் இதுவரையில் 7 கோடியே 10 லட்சத்து 6 ஆயிரத்து‌ 901 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அதில், ஆண், பெண் மற்றும் மாற்றுப்பாலினத்தவர் என மொத்தமாக 36 லட்சத்து 11 ஆயிரத்து‌ 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னையில் மட்டும் நேற்றுவரை (ஜன.04) 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 25 பேர் இன்று (ஜன.05) டிஸ்சார்ச் செய்யப்பட்டுள்ள நிலையில் 23 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பள்ளிகளில் விழிப்பணர்வு நிகழ்ச்சியால் 15 போக்சோ வழக்குகள் பதிவு - கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ABOUT THE AUTHOR

...view details