தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியாவில் 77 சதவீத பெண்கள் மட்டுமே பாதுகாப்பான மாதவிடாய் நாள்களை கடக்கின்றனர் - ஆய்வில் தகவல் - 77 சதவீத பெண்கள்

இந்தியாவில் உள்ள 19 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 77 சதவீத பெண்கள் மட்டுமே மாதவிடாய் நாள்களை பாதுகாப்பாக கடக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

Etv Bharatஇந்திய மாநிலங்களில்  பாதுகாப்பான மாதவிடாய் காலத்தை கடக்காத பெண்கள் - ஆய்வில் தகவல்
Etv Bharatஇந்திய மாநிலங்களில் பாதுகாப்பான மாதவிடாய் காலத்தை கடக்காத பெண்கள் - ஆய்வில் தகவல்

By

Published : Oct 14, 2022, 11:51 AM IST

சென்னை: இந்தியாவில் உள்ள 19 மாநில அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 77 சதவீத பெண்கள் மட்டுமே பாதுகாப்பான மாதவிடாய் நாள்களை கடப்பது தெரியவந்துள்ளதாக 'குழந்தை உரிமைகளும் நீங்களும்' என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் "குழந்தை உரிமைகளும் நீங்களும்" என்ற தன்னார்வு தொண்டு நிறுவனத்தினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், ‘தேசிய குடும்ப நல்வாழ்வு ஆய்வின்படி, இந்தியாவில் 52 சதவீத பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்து வருகிறது. 49 சதவீத வளரும் பெண் குழந்தைகள் இன்னும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தாமல் துணிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

பல்வேறு பள்ளிக்கூடங்களில் மாதவிடாய் குறித்து ஆசிரியர்கள் மாணவிகளுக்கு கற்பிப்பது கூட கிடையாது. ஆசிரியர்கள் மாணவிகளுக்கு கற்பித்தாலேயே இதில் இருக்கக்கூடிய மாய பிம்பங்கள் உடைந்து மாதவிடாய் என்பது ஒரு சாதாரண ஒரு விடயமாக மாறும். பள்ளிக்கூடங்களில் இருக்கக்கூடிய கழிவறைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கழிவறைகள் சுத்தமாக இல்லாமல் இருப்பதாலும் மாதவிடாயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் 25 சதவீத பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை இடைநீற்று செய்வதாகவும் ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்திய மாநிலங்களில் பாதுகாப்பான மாதவிடாய் காலத்தை கடக்காத பெண்கள் - ஆய்வில் தகவல்

இந்தியாவில் உள்ள 19 மாநிலங்கலில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 77 சதவீத பெண்கள் பாதுகாப்பான மாதவிடாய் நாள்களை கடந்து விடுவதும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 98 சதவீத பெண்கள் பாதுகாப்பான முறையில் மாதவிடாய் நாள்களை கடந்து வருவதும் தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திருமண செய்பவர்கள் அதிக அளவில் மாதவிடாய் பிரச்சனையில் சிக்கி வருகின்றனர். பல்வேறு இடங்களில் நாப்கின் மிஷின்கள் எந்திரங்கள் இருந்தாலும் அதில் ரூபாயை செலுத்தி நாப்கின்கள் எடுக்க முடியாத சூழல்தான் நிலவுகிறது. இதுகுறித்து தமிழ்நாட்டில் உள்ள 500 கிராமங்களில் பள்ளி மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்.

அதுமட்டுமின்றி மாதவிடாய் காலத்தில் விளையாட்டில் பங்கேற்கும் மாணவிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 15ஆம் தேதி ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் பெண்கள், மாணவிகள் பங்கேற்கும் கால்பந்து போட்டி நடத்த இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மூதாட்டிக்காக காட்டுப்பகுதியில் 10 கி.மீ., நடந்து செல்லும் தபால்காரர் - கௌரவித்த அரசு

ABOUT THE AUTHOR

...view details