சென்னை:ஆவடி மூர்த்தி நகரில் பர்பில் ஆட்டோ கேஸ் பங்க் உள்ளது. இதில் சிவகங்கையை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (ஜன.5) கலெக்ஷன் பணம் ரூ.1,54,000 ரொக்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் தன்னை இரண்டு பேர் வழிமறித்து செங்கலால் தாக்கி பணத்தைப் பறித்து சென்றதாக ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி உதவி ஆணையர் புருஷோத்தம்மன், ஆவடி ஆய்வாளர் டில்லிபாபு விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பெயரில் கார்த்திக் ராஜாவிடம் ஆவடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் பொய் கூறியிருப்பது தெரியவந்தது.