சென்னை சூளைமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் தனியார் தொலைக்காட்சியில் கேமரா மேனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 3 வயதில் மோனித் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், நேற்று மோனித் வீட்டின் மொட்டை மாடியில் மிதிவண்டி ஓட்டிக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென்று மோனித் முகத்தில் மாஞ்சா நூல் சிக்கி முகம், கழுத்துப் பகுதிகளில் அறுத்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக மோனித்துக்கு பெற்றோர் முதலுதவி செய்தனர்.
இதுகுறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் மோனித்தின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய காவல் துறையினர், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த நவீன் (23), விக்னேஷ் ஆகிய இரண்டு நபர்களைக் கைது செய்தனர்.