சென்னையில் பல்வேறு இடங்களில் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம்விடுவதால் ஏற்கனவே பல உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இதனால் காவல் துறையினர் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம்விடுவதற்கு தடை விதித்திருந்தனர். ஆனால் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் பலரும் மாஞ்சா நூல் மூலம் பட்டம்விடுவதை தொடர்ந்து செய்துவந்தனர்.
இந்நிலையில் சென்னை கொருக்குப்பேட்டையில் மூன்று வயது குழந்தை மாஞ்சா நூலால் கழுத்து அறுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவர் தன்னுடைய மூன்று வயது மகன் அபினேஷுடன் இன்று மாலை ஐந்து மணியளவில் தண்டையார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.