தமிழ்நாடு

tamil nadu

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @3PM

By

Published : Jun 5, 2020, 2:53 PM IST

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @3PM
Top 10 news @3PM

'அடித்தட்டு மக்களின் குரல் ஐநாவில் எதிரொலிக்கும்' - நெகிழ்ச்சியில் நேத்ரா

"உலக நாடுகளில் வாழ்ந்து வரும் ஏழை மக்களின் குரலாக ஐநாவில் என்னுடைய பேச்சு இருக்கும். அவர்களை அடித்தட்டு வாழ்விலிருந்து மேம்படுத்துவதே எனது நோக்கம்." - என்று பேசும் நேத்ராவின் தன்னம்பிக்கையும் பொதுநலமும் மாற்றத்தை மண்ணில் மட்டுமல்ல மக்களின் மனதிலும் விதைக்கும் என்பது உறுதி. இந்த கட்டுரையின் வாயிலாக ஐநாவின் நல்லெண்ண தூதர் நேத்ராவோடு பேசுவோம்....

கேரள கர்ப்பிணி யானை கொலை - விவசாயி ஒருவர் கைது

திருவனந்தபுரம்: கர்ப்பிணி யானை வெடியை உட்கொண்டதால் உயிரிழந்த விவகாரத்தில் விவசாயி ஒருவரை கேரள காவல்துறை கைதுசெய்துள்ளது.

பிரதமர் மோடியின் தனி செயலருக்கு உலக வங்கியில் பணி!

பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அலுவலர் ராஜீவ் டாப்னோ உலக வங்கி நிர்வாக இயக்குநரின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் முடிக்க உத்தரவு!

ஏழு என்.பி.எஃப் அதிருப்தி உறுப்பினர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகளை ஆறு வாரங்களுக்குள் முடிக்குமாறு நாகாலாந்து சட்டப்பேரவை சபாநாயகர் ஷேரிங்கைன் லாங்க் குமருக்கு கவுகாத்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் நலம் விசாரிப்பு!

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக தலைமை மருத்துவரிடம் நலம் விசாரித்தார்.

தமிழ்நாடு மின் வாரியத்திற்கு எதிராக தொடரும் குற்றச்சாட்டுகள்

சென்னை: நான்கு மடங்கு அதிகமாக மின் கட்டணம் உயர்ந்திருப்பதாக அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

80 விழுக்காடு பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்த திட்டம்!

சென்னை: பொறியியல் பருவத்தேர்வில் 80 விழுக்காடு பாடங்களுக்கு மட்டும் தேர்வினை நடத்துவது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது.

'இது அரக்கத்தனமான செயல்' -கெவின் பீட்டர்சன்

கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடியை வைத்து உணவளித்த மனிதாபிமானமற்ற சம்பவம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், விலங்கு ஆர்வலருமான கெவின் பீட்டர்சன் தனது வெறுப்பை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

சட்ட திருத்தம் தொழிலாளர் நலனை பாதுகாக்க வேண்டும் - உதய் கோடக் பேட்டி

டெல்லி: தொழிலாளர் சட்ட திருத்தம் குறித்து கோடக் மகேந்திரா வங்கியின் நிர்வாக இயக்குனர் உதய் கோடக் நமது ஈடிவி பாரத்திற்கு தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதி நொடிகளை நடித்துக்காட்டி போராட்டம்!

வாஷிங்டன்: ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டைக் கண்டித்து சியாட்டிலில் நடைபெற்ற போராட்டத்தில், அவரை காவலர்கள் கிடத்தியிருந்ததைப் போல சாலைகளில் படுத்து போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details