தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 25, 2020, 10:58 PM IST

ETV Bharat / state

நிவர் புயல்: 52 நிவாரண முகாமில் 2706 நபர்கள் தங்கியுள்ளனர்

ஆதரவற்றவர்கள், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு மாநகராட்சி ஊழியர்கள், நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி 53 நிவாரண முகாமில் 2,706 நபர்கள் தங்கியுள்ளனர்.

nivar cyclone news update
நிவர் புயல்: 52 நிவாரண முகாமில் 2706 நபர்கள் தங்கியுள்ளனர்

சென்னை:நிவர் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருகிறது. இதனால், சில பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனை மின்மோட்டார்களை வைத்து அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு அகற்றப்பட்டுள்ளது.

காலை முதல் 52 மரங்கள் விழுந்துள்ளன. அதனை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டுவரும் 16 சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான ஆறு சுரங்கப்பாதைகள் என 22 சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்காத வண்ணம் மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதரவற்றவர்கள், தாழ்வான பகுதியில் உள்ள மக்களை மீட்டு மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண முகாமில் தங்க வைத்து வருகின்றனர். தற்போது வரை 53 நிவாரண முகாமில் 2706 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, அத்தியாவசியப் பொருள்கள் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க:நிவர் புயல் கடந்துவிட்டதென அரசு அறிவிக்கும்வரை மக்கள் வெளியே வரக்கூடாது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details