தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் புதிதாக 2,537 பேருக்கு கரோனா பாதிப்பு

By

Published : Jul 10, 2022, 8:29 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக 2 ஆயிரத்து 537 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் புதிதாக 2,537 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் புதிதாக 2,537 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,537 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இன்று (ஜூலை10) புதிதாக 33 ஆயிரத்து 616 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், லண்டனிலிருந்து வந்த 2 நபர்கள் உட்பட மேலும் 2,537 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 62 லட்சத்து 81 ஆயிரத்து 229 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் 35 லட்சத்து 01 ஆயிரத்து 529 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மட்டும் தனிமைப்படுத்தும் மையங்களில் 2 ஆயிரத்து 560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 7,158 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 2,900நபர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 2,722 பேருக்கு கரோனா உறுதி

ABOUT THE AUTHOR

...view details