தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 2,340 பேருக்கு கரோனா பாதிப்பு! - தமிழகம்

தமிழ்நாட்டில் புதிதாக 2,340 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 2340 பேருக்கு கரோனா பாதிப்பு
புதிதாக 2340 பேருக்கு கரோனா பாதிப்பு

By

Published : Jul 16, 2022, 10:03 PM IST

சென்னை:இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று 33ஆயிரத்து 675 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதில், 2,340 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 64 லட்சத்து 63 ஆயிரத்து 65 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 35 லட்சத்து 15ஆயிரத்து 461 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப்பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 228 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details