சென்னை, பல்லாவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா வியாபாரம் அதிகரித்து வருவதாக பல்லாவரம் காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்லாவரம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் பல்லாவரம் பழைய சந்தை சாலையில் சந்தேகத்திற்குகிடமான இரண்டு நபர்கள் பிளாஸ்டிக் பையுடன் நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்களை காவல் துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த மூட்டையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.