தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 1,996 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னை : கரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள் வசிக்கும் 1,996 தெருக்கள் மாநகராட்சியால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 1,996 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
சென்னையில் 1,996 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

By

Published : Apr 20, 2021, 1:18 AM IST

சென்னையில் கரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்துவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளித்தல், மக்களுக்கு முகக்கவசம் வழங்குதல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.

சென்ற முறை ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால்கூட முழு தெருவும் அடைக்கப்பட்டு மாநகராட்சியால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதன் காரணமாக தற்போது ஒரு தெருவில் மூன்று முதல் ஐந்து வீடுகளில் தொற்று இருந்தால் மட்டுமே அதனை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது.

அதன்படி சென்னையில் ஆயிரத்து 996 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 351 தெருக்களும், அடுத்தபடியாக ராயபுரத்தில் 272 தெருக்களும் உள்ளன. இதில் சென்னையில் ஆயிரத்து 470 தெருக்களில் மூன்றுக்கும் மேற்பட்டோரும், 408 தெருக்களில் ஆறுக்கும் மேற்பட்டோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 108 தெருக்களில் பத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மீண்டும் சொந்த ஊர் புறப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details