தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 30, 2022, 9:56 PM IST

ETV Bharat / state

'சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் 17ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்' - கல்வித்துறை துணை ஆணையர்

சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டிற்குத் தற்போது வரை 17 ஆயிரம் புதிய மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சியின் கல்வித் துறை துணை ஆணையர் சினேகா தெரிவித்துள்ளார்.

’சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 17 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்’ - கல்வித்துறை துணை ஆணையர் சினேகா
’சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 17 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்’ - கல்வித்துறை துணை ஆணையர் சினேகா

சென்னை:சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த ஆண்டு சுமார் 1.15 லட்சம் பேர் சேர்ந்தனர். இந்நிலையில், 2022 - 2023ஆம் கல்வி ஆண்டிற்கு 17ஆயிரம் புதிய மாணவர்களின் சேர்க்கை தற்போது வரை நடைபெற்று உள்ளதாக சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் துணை ஆணையர் சினேகா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “பெருநகர சென்னை மாநகராட்சியின்கீழ் 281 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகராட்சியும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு வகையான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு கரோனா சூழலிலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை மாநகராட்சி அதிகரித்துக் காட்டியது. மேலும் அதைப் போலவே இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மிகுந்த விறுவிறுப்புடனே நடைபெற்று வருகிறது.

பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் புதிதாக 17,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து லாட்டரி சீட்டு விற்பனை: கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு

ABOUT THE AUTHOR

...view details