தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 3, 2022, 12:51 PM IST

ETV Bharat / state

போதை மறுவாழ்வு மைய ஜன்னலை உடைத்து 17 பேர் ஓட்டம்

திருவேற்காடு போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து தப்பி ஓடிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பியோட்டம்
போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பியோட்டம்

சென்னை:திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பாடசாலை தெருவில் இமானுவேல் என்பவர் போதை மறுவாழ்வு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை (ஜூன் 3) போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 17 பேர் ஜன்னலை உடைத்து தப்பி சென்றுள்ளனர். இதனையறிந்த ஊழியர்கள் திருவேற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதற்கிடையில் தப்பியோடியவர்களில் 8 பேர் மீண்டும் மையத்திற்கு வந்துள்ளனர். ஆகவே மீதமுள்ள 9 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வருவோர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் அட்டூழியம்! இருவர் மீது துப்பாக்கிச் சூடு

ABOUT THE AUTHOR

...view details