தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 1, 2019, 12:59 PM IST

ETV Bharat / state

கடையின் லாக்கரை உடைத்து ரூ.15லட்சம் கொள்ளை!

சென்னை : குளிர்பானம் விநியோகம் செய்யும் கடையின் லாக்கரை உடைத்து ரூ.15லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கடையிமன் லாக்கர் உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளை

சென்னை ஏகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார்(55). இவர் நெற்குன்றம் பால்வாடி தெருவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குளிர்பானம், பிஸ்கட் போன்ற பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மேலும், இந்த நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு வரவு செலவு கணக்கு பார்த்ததில் ரூ.15 லட்சம் இருந்துள்ளது. அதனை லாக்கரில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர், நேற்று காலை நிறுவனத்தை திறந்த ஜெயகுமார், லாக்கரில் உள்ள பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்பு, இது தொடர்பாக அவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : கோலம்போட்ட பெண்ணிடம் கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்!

ABOUT THE AUTHOR

...view details