தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

13 வயது பெண் சிறுமி கொடூர கொலை: வன்புணர்வு செய்யப்பட்டாரா? - சென்னை கொலை சம்பவம்

சென்னை: ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் வசித்துவந்த பெண் ஒருவர், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13-years-old-girl-murdered-in-his-home-in-chennai

By

Published : Oct 29, 2019, 8:36 PM IST

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 109வது சந்தில் வசித்துவருபவர் வேதவல்லி (50). இவரது தம்பி மகள் சோபனா (13). இவருடைய பெற்றோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் 10 ஆண்டுகளாக சோபனாவை வேதவல்லிதான் வளர்த்துவந்தார்.

வேதவல்லி, அவரது மகன் ஆகியோருடன் சோபனா அவர்களது வீட்டில் வசித்துவந்தார். இந்நிலையில், இன்று காலை வேதவல்லி வீட்டுவேலைக்குச் சென்றிருந்தபோது மகன் பாபு வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து தனியாக இருந்த சோபனாவை உடல் முழுவதும் பல இடங்களில் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிதாகக் கூறப்படுகிறது.

இன்று காலை 11 மணியளவில் சோபனாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தபோது, ரத்த வெள்ளத்தில் கிடந்த சோபனாவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சோபனாவை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

13 வயது சிறுமி கொடூரமாக சொலை செய்யப்பட்டது பற்றி காவல்துறை விசாரணை

பின்னர் ஆதம்பாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிசிடிவியை கைப்பற்றியதோடு, சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா எனவும் விசாரணை நடத்திவருகின்றனர். 13 வயது சிறுமி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாக அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மதுபோதையில் போலீஸ் மீது கல்லெறிந்த இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details