தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் 12 டன் நெகிழி பறிமுதல்!

By

Published : Dec 11, 2019, 5:28 PM IST

சென்னை: திருவொற்றியூர், மணலி பகுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 12 டன் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

12 ton plastic seized
12 ton plastic seized

ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. நெகிழிப் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் குறித்தும் நெகிழிப் பொருள்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சென்னை மாநகராட்சியால் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும், தடையை மீறி நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவோரை கண்டறிய பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட திருவொற்றியூர், மணலி ஆகிய மண்டலங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், சாலையோரக் கடைகள், உணவங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இன்று திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

மண்டல அலுவலர்கள் மூலம் மூன்று குழுக்களாக நடத்திய இந்த ஆய்வில், திருவொற்றியூர் பகுதியில் இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 6.4 டன் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபேல மணலி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 6.1 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள்

பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் மாநகராட்சி அலுவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: குரூப் 1 நேர்முகத் தேர்வில் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை

ABOUT THE AUTHOR

...view details