தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓர் ஆண்டுக்குள் 12 ஆயிரம் கிராமங்களுக்கு இணைய வசதி - அமைச்சர் மனோ தங்கராஜ் - Bharat Net Phase 2 project

பாரத் நெட் திட்டம் மூலம் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் ஓர் ஆண்டுக்குள் இணைய வசதிகள் ஏற்படுத்தப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்

By

Published : Mar 31, 2022, 6:19 AM IST

சென்னை:சென்னை தலைமைச்செயலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET Corporation) சார்பில் தமிழ்நாட்டில் பாரத் நெட் இரண்டாம் கட்ட திட்டம் (Bharat Net Phase-II) செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று(மார்ச் 30) கையெழுத்தானது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், "இன்றைய தினம் ஐடி துறையின் மைல் கல்லாகப் பார்க்கிறோம். பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே பாரத் நெட் மூலம் 2 பேக்கேஜ் ரோல் அவுட் (Roll out ) செய்து பணிகள் தொடங்கப்பட்டது.

இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் :இன்று 509 கோடி ரூபாய் மதிப்பில் 1 பேக்கேஜ் ரோல் அவுட் செய்யப்பட்டுள்ளது. விரைவில் 4ஆவது பேக்கேஜ் ரோல் அவுட் பணிகள் செய்யப்படும். இன்று ரோல் அவுட் செய்யப்பட்ட பேக்கேஜ் மூலம் ஓர் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சி, கிராமங்களில் பணிகள் முடிவுக்கு வரும். இதனால் 12 ஆயிரத்து 525 கிராமங்களுக்கு இணைய வசதிகள் கிடைக்கும்.

ஒட்டு மொத்தமாக 1710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக இ-சேவை மையம் வீழ்ச்சியில் இருந்தது. புதிதாக அரசு பொறுப்பேற்ற பிறகு கூடுதலாக 56 இ-சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டது.

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

மேலும் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இ-சேவை மையங்கள் இல்லையோ அங்கு இ-சேவை மையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இ-சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் விதவைகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில், இளநிலை பட்டப்படிப்புகளுக்குப் பொது நுழைவுத்தேர்வு

ABOUT THE AUTHOR

...view details