தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 21, 2020, 10:15 AM IST

ETV Bharat / state

விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

சென்னை: வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்த 11வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் திருநின்றவூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

11-year-old boy electrocuted while playing
11-year-old boy electrocuted while playing

சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர், கன்னிகாபுரம், அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமன். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு சூர்யா(11) என்ற மகன் உள்ளார். அவன், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான்.

இதற்கிடையில், ராமன் வீட்டிற்கு மின் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பியை தாங்கி பிடிப்பதற்காக வீட்டு முன்பக்க கேட்டுடன் இரும்பு பைப் ஒட்டிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சூர்யா வீட்டின் முன்பு சக சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் எதேச்சையாக கேட்டை தொட்டவுடன், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சூர்யா வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து, உறவினர்கள் சடலத்தை எடுத்துக்கொண்டு திருநின்றவூரில் உள்ள வீட்டுக்கு வந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருநின்றவூர் காவல் துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details