தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன - corona vaccine

புனேவில் இருந்து விமானம் மூலம் 10 லட்சத்து 56 ஆயிரத்து 200 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை கொண்டுவரப்பட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசிகள்
கோவிஷீல்டு தடுப்பூசிகள்

By

Published : Sep 9, 2021, 3:03 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது.

அதனடிப்படையில், தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. மக்களும் தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக்கொள்கின்றனர்.

தடுப்பூசி வருகை

இந்த நிலையில் இன்று (செப்.9) புனேவில் இருந்து விமானம் மூலம் 89 பார்சல்களில் 10 லட்சத்து 56 ஆயிரத்து 200 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன.

கோவிஷீல்டு தடுப்பூசிகள்

இதனை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.

இந்த தடுப்பூசிகளை பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரோனா பாதித்த யுபிஎஸ்சி தேர்வர்... நேர்காணல் தேதியை மாற்றி அறிவித்த தேர்வாணையம்... போராடிக் காப்பாற்றிய மருத்துவக் குழு!

ABOUT THE AUTHOR

...view details