தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 8, 2021, 11:04 PM IST

ETV Bharat / state

வாகனச் சோதனையில் 1 லட்சம் ரூபாய் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிரடி

சென்னை: குரோம்பேட்டை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் கணக்கில் வராத 1 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை
money

சென்னை, குரோம்பேட்டையில் எம்.ஐ.டி.பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த வாகனம் ஒன்றை மடக்கிப் பிடித்து சோதனையிட்டதில் உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், பல்லாவரம் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லலிதாவிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், தாம்பரத்திலிருந்து அடையாற்றில் உள்ள வங்கி ஒன்றில் பணத்தை டெபாசிட் செய்ய கிருஷ்ணமூர்த்தி(78) என்பவர் பணத்தை எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா ரூ.1500, ஆறு சிலிண்டர் - இது எடப்பாடியின் அப்டேட் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details