தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ 300 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் - சென்னை

கொழும்பில் இருந்து சென்னை கடத்தி வரப்பட்ட ரூ.59 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 300 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொழும்பில் இருந்து சென்னை கடத்தி வரப்பட் 1 கிலோ 300 கிராம் தங்கம் பறிமுதல்
கொழும்பில் இருந்து சென்னை கடத்தி வரப்பட் 1 கிலோ 300 கிராம் தங்கம் பறிமுதல்

By

Published : Jul 28, 2022, 9:14 PM IST

சென்னை:பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலையம் சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த மஸ்தான் கனி (28), கலந்தர் ஷாஜகான் (30), சுல்தான்(30) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது 3 பேரும் தங்களுடைய உள்ளாடைக்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டு இருந்த பாக்கெட்டுகளை கண்டுபிடித்தனர்.

அதில் தங்க கட்டிகள் இருந்தன. 3 பேரிடம் இருந்து ரூ. 59 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தி வந்த 3 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் - இந்தியத் தேர்தல் ஆணையம்

ABOUT THE AUTHOR

...view details