செங்கல்பட்டு: அச்சிருப்பாக்கம் அடுத்த இந்தலூரைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி வைத்தீஸ்வரி. இவர், சந்தேகத்திற்கு இடமான முறையில் வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக நேற்றைய முன்தினம் (மார்ச் 03) மீட்கப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வைத்தீஸ்வரியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், உரிய நீதி வேண்டும் எனக் கோரி, ஊர்மக்களும், வைத்தீஸ்வரியின் உறவினர்களும் இன்று (மார்ச் 05) அச்சிருப்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.