செங்கல்பட்டு: சென்னை மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் கடந்த ஜூலை 24ஆம் தேதி அம்மணம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கழுத்து அறுபட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று தினேஷ், அவரது சகோதரி மகன் முரளி, முரளியின் நண்பர்கள் ஆகியோர் சேர்ந்து மது அருந்தியது தெரியவந்தது.
இதனையடுத்து முரளி, அவரது நண்பன் பிரசாந்த் ஆகியோரை பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர். இந்த விசாரணையில் தினேஷ், சிறுவயதிலிருந்தே தனது மருமகன் முரளிக்கு தவறான வழிகாட்டி, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது. இதனால் முரளி பலமுறை சிறை செல்ல நேர்ந்துள்ளது.