தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 12, 2020, 7:09 PM IST

ETV Bharat / state

சீருடைப் பணியாளர் தேர்வு: காவல் உயர் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு: சீருடைப் பணியாளர் தேர்வு நாளை (டிசம்பர் 13) நடைபெறவுள்ளதை முன்னிட்டு காவல் உயர் அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Tamil Nadu Police Recruitment
Tamil Nadu Police Recruitment

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நாளை (டிச.13) பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணிகளுக்கு இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 6 ஆயிரம் தேர்வர்கள் இதில் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, மாவட்டத்தில் ஆறு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்ணிவாக்கத்திலுள்ள பெரி தொழில் நுட்பக் கல்லுாரி, கொளப்பாக்கத்திலுள்ள தாகூர் பொறியியல் கல்லுாரி, சின்னக் கொளப்பாக்கத்தில் கற்பக விநாயகா கல்லுாரி, வண்டலுார் கிரஸண்ட் பொறியியல் கல்லுாரி, காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லுாரி, அதே வளாகத்தில் உள்ள வள்ளியம்மை கல்லுாரி ஆகிய ஆறு மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.

இந்தத் தேர்வுப் பணியில், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து, 600 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி கலையரங்கில் இன்று (டிச.12) நடைபெற்றது. ரயில்வே ஐ.ஜி, வனிதா, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் தேர்வுப் பணியில் ஈடுபடவுள்ள காவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

இதையும் படிங்க: தொப்பூர் கோர விபத்து : அதிகரிக்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை !

ABOUT THE AUTHOR

...view details