செங்கல்பட்டு: Spiritual: தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாடெங்கும் கரோனா, ஒமைக்ரான் போன்று பல வைரஸ்கள் ஒருபுறம், சாதி, மதம் போன்ற பிரச்னைகள் மறுபுறம் தலைவிரித்தாடி, நாட்டு மக்களை விழிபிதுங்க வைத்துக்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஆன்மிகம் சார்ந்த புதுப்புது பிரச்சினைகள் கிளம்பி வருவது, பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. தற்போது புதிதாக, ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, அட்டகாசம் செய்யும், அன்னபூரணி என்ற பெண்மணியைப் பற்றிய வீடியோ, காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வைரலாகிப் பரவி வருகின்றன.
அவதார அலப்பறைகள்
ஏற்கெனவே மேல்மருவத்தூரில் புகழ்பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இந்த சித்தர் பீடம் குறித்து நீதிமன்றத்தில் சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 'ஆதிபராசக்தி' என்று அன்னபூரணி என்ற பெண்மணியை சிலர் வழிபடுவது குறித்த காணொலி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஏனெனில், முன்னதாக இக்குறிப்பிட்ட அன்னபூரணி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த நிகழ்ச்சியில், மற்றொரு பெண்ணின் கணவரிடம், திருமணத்தைமீறிய உறவு வைத்திருப்பதாக அந்த அன்னபூரணியே ஒத்துக்கொண்டுள்ளார்.