செங்கல்பட்டு: தற்பொழுது நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் செய்ய வேண்டியவை, யாரை அணுகலாம், எப்படி அணுகலாம் போன்றவை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஊழல் எதிர்ப்பு வாரம் வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறையின் துணை கண்காணிப்பாளர் இம்மானுவேல் ராஜசேகரன் ஆலோசனையின் படி, அலுவலர்கள் தெருக்கூத்து கலைஞர்களை வைத்து பொதுமக்களிடையே பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.