செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில், கடந்த இரண்டு நாள்களாக அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது. கவனிப்பாரற்று கிடந்த இந்தச் சடலம் பற்றி, மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் என யாருமே கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களின் கவனத்திற்கு இதனைச் சிலர் கொண்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனை உயர் அலுவலர்களிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டவுடன், பதறியடித்துவந்த ஊழியர்கள், சடலத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.