செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி கோவிந்தராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பரதன். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி வனிதா.
இவர்கள் இருவரும் சேர்ந்து, கூடுவாஞ்சேரி காவல் துறையினர் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாகப் புதிய டாட்டா சுமோ கார் ஒன்றை வாங்கி மாவட்ட காவல் துறையினருக்கு அன்பளிப்பாக அளித்துள்ளனர்.