செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ளது தண்டலம் கிராமம். மதுராந்தகத்திலிருந்து எல்.எண்டத்துார் செல்லும் வழியில் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இக்கிராமம். இங்கு உள்ள பனங்கால் ஓடை எல்.எண்டத்துார், மதுராந்தகம் சாலையின் குறுக்கே செல்கிறது. ஓடை இருக்குமிடத்தில், சாலையில் தடுப்புச் சுவர் கிடையாது. இதனால், மழைக்காலங்களில் ஓடையில் நீர் நிரம்பியுள்ளபோது இரவு நேரங்கள், அதிகாலையில் இவ்வழியே இருசக்கர வாகனத்தில் செல்லும் பலர் ஓடையில் விழுந்து காயமடைந்துள்ளனர்.
இரண்டு நாட்கள் முன்னதாக, அதிகாலையில் இவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த, ஒரத்துாரைச் சேர்ந்த அன்பரசு என்ற இளைஞர் நிலைத்தடுமாறி இந்த ஓடைப் பள்ள நீரில் விழுந்து உயிரிழந்தார். இதுபோன்றதொரு மற்றொரு உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க ஓடையை கடந்துச் செல்ல பாலம் கட்டித்தரவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.