தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த வடமாநில இளைஞர்கள் - தமிழ் செய்திகள்

செங்கல்பட்டு: சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வடமாநில இளைஞர்கள் குவிந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

By

Published : May 9, 2020, 1:34 AM IST

செங்கல்பட்டு அடுத்த வல்லம் ஊராட்சிக்குட்பட்ட அம்மணம்பாக்கத்திலுள்ள குயிக் போட்ச் கையுறை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் 40க்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிகேட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த பிகார், உத்திரப்பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர், தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டி அனுமதி கேட்டு வந்தனர். அவர்களிடம் செங்கல்பட்டு வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதன்பின்னர் இன்னும் பத்து நாட்களுக்குள் அனைவரும் ஊருக்குச் செல்ல அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்; மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறி, அவர்களை கலைந்து செல்ல அலுவலர்கள் அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூடிய வடமாநில இளைஞர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டியதன் அவசியம் என்ன? - விஜயகாந்த் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details