தமிழ்நாடு

tamil nadu

உத்திரமேரூர் தங்கப்புதையல்! - விஞ்ஞானப்பூர்வ ஆய்வு செய்ய நடவடிக்கை!

By

Published : Dec 17, 2020, 3:50 PM IST

செங்கல்பட்டு: உத்திரமேரூரில் கிடைத்த பழமையான தங்கப் புதையல் குறித்து விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு செய்து ஆய்வறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

pandiarajan
pandiarajan

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தை அடுத்த பெரும்பாக்கத்தில், முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஒவ்வொரு கிராமத்தினரும், மூன்று கிலோ மீட்டர்களுக்கு உள்ளாக, அடிப்படை மருத்துவ வசதிகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த மினி கிளினிக் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிக்ழ்ச்சியில் தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கலந்து கொண்டு, கிளினிக்கைத் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” தமிழகத்தில் புதிதாக, 2,000 அரசு மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு மினி கிளினிக்கிலும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் இருப்பு வைக்கப்படும்.

உத்திரமேரூர் தங்கப்புதையல்! - விஞ்ஞானப்பூர்வ ஆய்வு செய்ய நடவடிக்கை!

அண்மையில் உத்திரமேரூரில் கிடைத்த தங்கப்புதையல், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. அவற்றை, கார்பன் டேட்டிங் முறைப்படி அல்லாமல், வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு பண்பாட்டு முறையில் விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஆய்வறிக்கையும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் “ என்றார்.

இதையும் படிங்க: சென்னையில் 210 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details