காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அடுத்த ஏபி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 32). இவருக்கு சித்ரா (வயது 28) என்ற மனைவியும் நித்யஸ்ரீ (வயது 5), காவிய ஸ்ரீ (வயது 2) என்ற இரு மகள்களும் உள்ளனர்.
பாலசுப்பிரமணியனின் இரு மகள்களுக்கும் அடுத்த மாதம் காதணி விழா நடைபெற உள்ளதை அடுத்து, குடும்பத்தினர் நான்கு பேரும் நேற்று (டிச.20) புத்தாடைகள் வாங்க சென்னை சென்றுள்ளனர். தொடர்ந்து, சென்னையிலிருந்து தங்களது வீட்டிற்கு அனைவரும் திரும்பியபோது, செங்கல்பட்டு மாவட்டம். மாமண்டூர் அடுத்த பாலாற்றுப்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாலசுப்பிரமணியன், நித்தியஸ்ரீ இருவரின் மீதும் லாரியின் பின்சக்கரம் ஏறியுள்ளது.