தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 12, 2020, 9:26 AM IST

ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலை முக்கிய சந்திப்புகளில் கரோனா வைரஸ் ஓவியம்

செங்கல்பட்டு: பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக தேசிய நெடுஞ்சாலை முக்கிய சந்திப்பில் கரோனா வைரஸ் ஓவியமும் அதற்கான விளக்கமும் அடங்கிய வாசகங்கள் வரையப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலை முக்கிய சந்திப்புகளில் கரோனா வைரஸ் ஓவியம்
தேசிய நெடுஞ்சாலை முக்கிய சந்திப்புகளில் கரோனா வைரஸ் ஓவியம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி சார்பில் கரோனா தொற்று பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் சிலர் விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருகின்றனர்.

மேலும் தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், மருத்துவர்கள் தினசரி ஓய்வில்லமல் உழைத்து வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை முக்கிய சந்திப்புகளில் கரோனா வைரஸ் ஓவியம்

இந்நிலையில் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில், கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி தலைமையில் தேசிய நெடுஞ்சாலை முக்கிய சந்திப்பில் கரோனா வைரஸ் ஓவியமும் அதற்கான விளக்கமும் அடங்கிய வாசகங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்தக் கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ள இடத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதையும் படிங்க: முழு அடைப்பின்போது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details