தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நெம்மேலியில் ஆய்வு செய்த முதலமைச்சர் - செங்கல்பட்டு செய்திகள்

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு, மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது அலகின் திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது அலகின் திட்டப்பணிகளை ஆய்வு செய்யும் மு.க.ஸ்டாலின்
செங்கல்பட்டு மாவட்டம்

By

Published : Oct 19, 2021, 6:09 PM IST

செங்கல்பட்டு: நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாம் அலகின் திட்டப் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

இரண்டாம் அலகு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்துள்ளது, நெம்மேலி. இப்பகுதியில், கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலையின் முதல் அலகு, கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்நிலையில், சென்னையின் குடிநீர் பஞ்சத்தைக் கருத்தில் கொண்டு, இங்கு இரண்டாம் அலகிற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் ஆய்வு

நெம்மேலியில் முதலமைச்சர் ஆய்வு

இந்தப் பணிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: கீழடி 7ஆம் கட்ட அகழாய்வு: திறந்தவெளி அருங்காட்சியமாக மாற்றப்படும்!

ABOUT THE AUTHOR

...view details