தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கல்பட்டில் பட்டப்பகலில் செயின் பறிப்பு; சிசிடிவி காட்சிகள் வெளியீடு - CCTV display

செங்கல்பட்டில் பட்டப்பகலில் பெண்ணிடம் இருவர் தங்கச்சங்கிலியைப் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

செங்கல்பட்டில் பட்டப் பகலில் செயின் பறிப்பு
செங்கல்பட்டில் பட்டப் பகலில் செயின் பறிப்பு

By

Published : Oct 9, 2022, 4:15 PM IST

செங்கல்பட்டு பகுதியைச்சேர்ந்த தம்பதியர் கண்ணன், சுப்புலட்சுமி. இவர்கள் பரனூர் பகுதியில் காய்கறிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று அக்டோபர் 8ஆம் தேதி, பிற்பகல் சுப்புலட்சுமி, தனது கடைக்குச்செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

தனியார் பள்ளி ஒன்றின் அருகே வரும்போது அவரது கம்மல் கழன்று கீழே விழுந்துள்ளது. சாலையில் விழுந்த கம்மலை எடுப்பதற்காக சுப்புலட்சுமி, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தேடிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த, இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் சுப்புலட்சுமி கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு பறந்தனர்.

செங்கல்பட்டில் பட்டப் பகலில் செயின் பறிப்பு

பட்டப்பகலில் தனது சங்கிலி பறிக்கப்பட்டதையடுத்து, செங்கல்பட்டு காவல் துறையில் சுப்புலட்சுமி புகார் அளித்துள்ளார். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக்கைப்பற்றி ஆராய்ந்த போலீசார், அதன் அடிப்படையில் குற்றவாளிகளைத்தேடி வருகின்றனர். இந்தச்சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: செங்கல்பட்டு மாவட்ட காவல் நிலையங்களில் டிஜிபி திடீர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details