திருவண்ணாமலை நியூ கார்க்கானா நகர் பகுதியை சேர்ந்த ஷண்முகம் என்பவரது மகன் கவின்குமார் (வயது23). இவர் கோவை இந்துஸ்தான் கல்லூரியில், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, ஐஏஎஸ் தேர்விற்காக சென்னையில் நன்பர்களோடு தங்கி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சொந்த ஊருக்கு செல்வதற்காக, செங்கல்பட்டு வித்யாசாகர் கல்லூரி அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தனது நண்பர் முகம்மது ஆதாம் (வயது23) என்பவருடன், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சென்னை நசரத்பேட்டைபகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் ரவீந்திரன் (வயது 60) என்பவர் தனது சொந்த காரில் தன் மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் கோயில்பட்டிக்கு சென்றுவிட்டு, சென்னைக்கு வந்த போது, தனது காரை முந்திச்செல்ல வந்த கனரகவானத்தை முந்தி செல்வதற்காக, தனது காரை அதிவேகமாக ஓட்டியுள்ளார்.