தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 12, 2021, 7:14 PM IST

ETV Bharat / state

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது!

செங்கல்பட்டு: மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது!
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது!

செங்கல்பட்டு மாவட்டத்தில், பல தனியார் கல்லூரிகளும், அரசு மருத்துவக் கல்லுாரியும் இயங்கி வருகின்றன. இங்கு பயிலும் பல மாணவர்கள், குறிப்பாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துவருவது யார் என காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்தனர்.

இதில், பட்ரவாக்கம் பகுதியில் அதிகளவில் கஞ்சா புழக்கம் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர், அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தொடர் கண்காணிப்பின் மூலம், வினோத்(34) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்ததில், பட்ரவாக்கம், தாம்பரம், பல்லாவரம், கேளம்பாக்கம் என மாவட்டம் முழுவதும் இவர் கஞ்சாவை விற்று வந்தது தெரிந்தது. இதனையடுத்து, வினோத்தை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details