செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். 60 வயதான இவர், விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 17 ஆம் தேதி வயல்வெளிக்கு சென்ற கன்னியப்பன் வீடு திரும்பவில்லை. எனவே இது குறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து கன்னியப்பன் காணாமல் போனதற்கு மறுதினம், ராமாபுரம் பகுதியில் உள்ள ஒரு புதரில் தலையில் பலத்த காயங்களுடன் கன்னியப்பன் இறந்து கிடந்துள்ளார். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த மேல்மருவத்தூர் காவல்துறையினர், கொலை செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.