தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 25, 2021, 9:04 AM IST

ETV Bharat / state

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருள்கள்

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாஜக சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

நிவாரண பொருள்கள் வழங்கிய பாஜக
நிவாரண பொருள்கள் வழங்கிய பாஜக

செங்கல்பட்டு: பாஜக சார்பில் ஏழைகளுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரி அருகே தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜூன்.24) நடைபெற்றது.

நிவாரணம்

இதில் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த ஏழை குடும்பத்தினர், தூய்மை பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

தமிழ் மக்கள் வளர்ச்சி

இந்நிகழ்வில் மக்களுக்கு மத்தியில் உரையாடிய எல். முருகன், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் பாஜக அரசு தொடர்ந்து செயல்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, கரோனா நிவாரண உதவித்தொகை

ABOUT THE AUTHOR

...view details