தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை - பொதுமக்கள் சாலை மறியல் - காவல்துறை விசாரணை

செங்கல்பட்டு: இடைக்கழி நாடு பேரூராட்சியின் முன்னாள் அதிமுக துணைத் தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

aiadmk-leader-assassination-public-road-blockade
aiadmk-leader-assassination-public-road-blockade

By

Published : Sep 20, 2020, 3:06 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இடைக்கழி நாடு பேரூராட்சியின் முன்னாள் அதிமுக துணைத் தலைவராக இருந்தவர் அரசு என்கின்ற ராமச்சந்திரன்.

இந்நிலையில் நேற்று (செப்.19) இவர் தனது வீட்டருக்கே நடைபயிற்சி மேற்கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், இடைக்கழிநாடு பேரூராட்சி எதிரே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலைமறியல் காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. தகவலறிந்து வந்த சூனாம்பேடு காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இருப்பினும் கொலையாளிகளை கைது செய்யும் வரை மறியலை கைவிடப்போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details