செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய சட்டப்பேரவை தொகுதியாக செய்யூர் (தனி) தொகுதி கருதப்படுகிறது. இங்கு 2011-16 காலகட்டத்தில் அதிமுகவின் வி.எஸ். ராஜு எம்எல்ஏவாக இருந்து வந்தார். 2016 தேர்தலில் இந்தத் தொகுதியில், தொகுதியை சேராத முட்டுக்காடு முனுசாமிக்கு, அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.
திமுக தரப்பில் ஆர்.டி. அரசு போட்டியிட்டார். சொற்ப தபால் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஆர்.டி அரசு முட்டுக்காடு முனுசாமியைத் தோற்கடித்தார். அதிமுக சார்பில் உள்ளூர் வேட்பாளரை நிறுத்தியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என அந்த நேரத்தில் அக்கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், உள்ளூர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்பது, கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களின் விருப்பமாகவும் இருந்துவந்தது. இந்நிலையில், நேற்று (மார்ச்.10) வெளியான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில், செய்யூர் தொகுதிக்கு கணிதா சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.