செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த காவாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது பழைய வீட்டை இடிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், ஆனந்தன், கோதண்டன் ஆகிய மூன்று பேரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்தனர். இதில், ஜெயக்குமாருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.